அண்மைய செய்திகள்

recent
-

முள்ளிக்குளம் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்களை தொடர்ந்தும் அச்சுறுத்தும் கடற்படை-(படங்கள் )

தமது பூர்வீக நிலங்களில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை வெளியேற்றக் கோரி மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் முன்னெடுத்து வருகின்ற கவனயீர்ப்பு போராட்டம் இன்று சனிக்கிழமை மூன்றாவது நாளாகவும் தொடர்கின்ற போதும் கடற்படையினர் முகாமை விட்டு வெளியில் வந்து மக்களை தொடர்ச்சியாக புகைப்படம் எடுத்து அச்சுருத்துவதாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் அபகரிக்கப்பட்டு தற்போது கடற்படை முகாமாக மாறியுள்ள தமது நிலத்தை மீட்டு தங்களை மீள் குடியேற்றம் செய்ய வலியுறுத்தி முள்ளிக்குளம் கிராம மக்கள் கடந்த வியாழக்கிழமை (23) காலை ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று சனிக்கிழமை மூன்றாவது நாளாகவும் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.

குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அருட்தந்தையர்கள்,மீனவ அமைப்புக்களின் பிரதி நிதிகள்,தொண்டு அமைப்புக்களின் பிரதி நிதிகள்,மாகாண சபை உறுப்பினர் வைத்தியர் ஜீ.குணசீலன்,மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ்,மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் உள்ளிட்ட பலர் நேரடியாக சென்று மக்களை சந்தித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

எனினும் மக்கள் மூன்றாவது நாளாகவும் இன்று சனிக்கிழமை குறித்த போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற நிலையில் குறித்த மக்களை அவ்விடத்தில் இருந்து வெளியேற்றும் வகையில் தொடர்ச்சியாக கடற்படையினர் செயற்பட்டு வருகின்றனர்.

இரவு நேரங்களில் புகைப்படம் எடுத்தல்,வீதிக்கு முன் வந்து மக்களை புகைப்படம் எடுத்தல்,கடற்படை முகாம் நுழைவாயிலில் அதிகலவான கடற்படையினர் ஒன்று கூடி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்களை அவதானித்தல், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் இடம் பெறும் இடத்திற்கு வருகின்ற பிரதி நிதிகளை புகைப்படம் எடுத்தல்,அவர்களின் விபரங்களை பதிவு செய்தல் போன்ற நடவடிக்கைகளை தொடர்ச்சியாக கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

-எனினும் கடற்படையினர் எவ்வாறான அச்சரூத்தல்களை தமக்கு கொடுத்தாலும் தாம் போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும்,நிலம் மீட்கப்படும் வரை போராட்டம் தொடரும் என கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற முள்ளிக்குளம் மக்கள் தெரிவித்துள்ளனர்.

மன்னார் நிருபர்-
(25-3-2017)










நியூ மன்னார் இணையம் 
முள்ளிக்குளம் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்களை தொடர்ந்தும் அச்சுறுத்தும் கடற்படை-(படங்கள் ) Reviewed by NEWMANNAR on March 25, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.