கேப்பாப்புலவில் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்படும் சித்திரைப் புதுவருடம்....
இலங்கை படையினரிடம் காணப்படும் தங்களது காணிகளை மீள கையளிக்குமாறு கேப்பாப்புலவு பிரதேச மக்கள் முன்னெடுத்தும் வரும் போராட்டம் இன்றும் தொடர்கிறது.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இன்றைய நாளை கறுப்பு தினமாக அனுஷ்டித்துள்ளனர். மேலும் தமது போராட்டத்திற்கு தீர்வு கிடைக்கும் வரையில் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த போராட்டம், 138 குடும்பங்களுக்கு உரித்தான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரி இராணுவமுகாமுக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கேப்பாப்புலவில் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்படும் சித்திரைப் புதுவருடம்....
Reviewed by Author
on
April 14, 2017
Rating:
No comments:
Post a Comment