அண்மைய செய்திகள்

recent
-

மன்/ பெரிய குஞ்சுக்குளம் R.C.T.M.V பாடசாலையின் பெற்றோர் தினம் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது

மன்/ பெரிய குஞ்சுக்குளம் R.C.T.M.V பாடசாலையின் பெற்றோர் தினம் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது

உலகில் அன்னையர் தினம் , தந்தையர் தினம் என்பது கொண்டாடப்பட்டுவருவது நாம் அறிந்ததே இவற்றைத்தாண்டி பெற்றோர் தினம் எனும் மகத்துவமான தினம் 26/10/2017 ஆம் திகதி வியாழக்கிழமை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு தாயும் தந்தையும் என இருவரும் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக 
 மன்/ தூய ஜோசப் வாஸ் மகா வித்தியாலயத்தின் அதிபரும் பெரிய குஞ்சுக் குளத்தின் மண்ணின் மைந்தனுமாகிய திரு. மை. கிறிஸ்ரியான் அவர்களும்

சிறப்பு விருந்தினராக
மன்னார் மாவட்ட யதீஸ் மாணவர் தொண்டு நிறுவனத்தின் பணிப்பாளர் திரு.S.R. யதீஸ் அவர்களும் அவர்தம் பாரியார் அவர்களும்

கௌரவ விருந்தினர்களாக அயல் பாடசாலையின் அதிபர்களான மன்/ கட்டையடம்பன் R.C.T.M.S பாடசாலையின் அதிபர்
 திரு. M. M. லூர்தாகரன் அவர்களும்
மன்/ தட்சனாமருதமடு M.V. பாடசாலையின் அதிபர்
திரு.A. ஜெரால்ட் அல்மேடா அவர்களும்
சின்ன பண்டிவிரிச்சான் அ.த.க பாடசாலையின் அதிபர்
திரு. ஜேசுதாசன் அவர்களும்
பாலம்பிட்டி ஆரம்ப பாடசாலையின் அதிபர் திரு. இக்னேசியஸ் அவர்களும்
சின்ன பண்டிவிரிச்சான் அ.த.க பாடசாலையின் அதிபர்
இவர்களுடன் குஞ்சுக் குளத்தின் கிராம அலுவலர் திரு. கேதீஸ் அவர்களும் கிராம சுகாதார பரிசோதகர் அவர்களும்
மன்/ மடுறோட் சிங்கள பாடசாலையின் அதிபர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்
இந்நிகழ்வானது மன்/ பெரிய குஞ்சுக்குளம் R.C.T.M.V பாடசாலையின் அதிபர்
திரு.A. V. ஜெயசீலன் அவர்களின் தலைமையில் ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர்களின் பூரண முழுப்பங்களிப்புடன் மிக மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பெற்றோர்கள் ஒருவர் விடாமல் அனைவரும் கலந்துகொண்டதுடன் பெற்றோர்கள் அனைவருக்கும் ஞாபக சின்னமாக மிகச்சிறப்பான பெற்றோரின் தியாகத்தை போற்றுகின்ற கவிதை அடங்கிய சான்றிதழ் பிறேம் ஒன்று கௌரவ சின்னமாக வழங்கப்பட்டது அத்துடன் அதிபர் அவர்களின் சேவையை கௌரவித்து அவரின் உருவப்படம் தாங்கிய பிறேம் ஒன்றும் வழங்கப்பட்டது
அத்துடன் 2 ஆம் தவணையில் தவணைப்பரீட்சையில்
1 ஆம் 2 ஆம் 3 ஆம் பிள்ளைகளாக வந்த மாணவர்கள்
" சாதனைச் சூரியன் " என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

மாணவர்களினதும் பாடசாலையினதும் கல்வி வளர்ச்சியில் முதுகெலும்பாக விளங்குகின்ற பெற்றோர்கள் கடந்த நான்கு வருடங்களாக எல்லா இடையூறுகளையும் தாண்டி நடைபெறுவதில் முழுமூச்சாக உழைகின்ற அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பாடசாலை சமூகத்தினரை வெகுவாக நியூ மன்னார் இணைய குழுமம் பாராட்டி மகிழ்கின்றது.





















மன்/ பெரிய குஞ்சுக்குளம் R.C.T.M.V பாடசாலையின் பெற்றோர் தினம் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது Reviewed by Author on October 30, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.