அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவி12மணித்தியாலத்தினு92கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

வவுனியாவில் இன்று (12.11.2017) காலை முதல் பிற்பகல் 12 மணிவரையான காலப்பகுதியில் இருவேறு பகுதிகளில் 92 கஞ்சாவினைக்கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்

கனகராயன்குளம் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சொகுசு தனியார் பேரூந்தினுள் பயணப்பொதியினுள் வைத்து 90கிலோ கஞ்சாவை கடத்தி சென்ற வவுனியா செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான இராஜேந்திரன் சிவகுமார் வயது 34, இராஜேந்திரன் ஜெயதாஸ் 36 வயதுடைய இருவரை இன்று (12.11.2017) காலை 5.30மணியளவில் கனகராயன்குளம் பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்

இதேவேளை இன்று காலை 9.30மணியளவில் புளியங்குளம் பகுதியில் பேரூந்தினுள் 2கிலோ கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த இரானுவ வீரரோருவரையும் கைது செய்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று வவுனியாவில் கைப்பற்றப்பட்ட 92கிலோ கஞ்சாவினையும் சந்தேக நபர்கள் மூவரையும் விசாரணைகளின் பின்னர் மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்

வவுனியாவி12மணித்தியாலத்தினு92கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது Reviewed by Author on November 12, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.