12 ஆண்டுகளாக முதலிடம்: உலகில் சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியல் வெளியீடு
இதில் இந்தாண்டும் உலகின் சக்திவாய்ந்த பெண்மனியாக ஜெர்மன் பிரதம் ஏஞ்செலா மெர்கல் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தொடர்ந்து 7-வது முறையாகவும் மொத்தம் 12 முறையாகவும் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
இந்த ஆண்டிற்கான இப்பட்டியலில் 23 புதிய பெண்கள் இடம்பெற்றுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் 19-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
அதுமட்டுமின்றி இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த, ஐசிஐசிஐ தலைமை செயல் அதிகாரி சாந்தா கோச்சார் 32-வது இடத்திலும், ஹெச்சிஎல் கார்பரேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரோஷினி நாடார் 57-வது இடத்திலும், பயோகான் நிறுவனர் கிரண் மஜூமுதார் 71-வது இடத்திலும் உள்ளனர்.
மேலும் பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா 97-வது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
12 ஆண்டுகளாக முதலிடம்: உலகில் சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியல் வெளியீடு
Reviewed by Author
on
November 04, 2017
Rating:
No comments:
Post a Comment