28 வருடத்திற்கு முன்பு சொன்ன விஷயம் நடந்தது - ஆச்சர்யமடைந்த மாதவன்!
நம் எண்ணங்கள் தான் நம் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது என்பதே உண்மை. இதை முழுமையாக நம்பிய பலரின் வாழ்க்கை மாறியிருக்கிறது.
அப்படியொரு விஷயம் தான் பிரபல நடிகரான மாதவனின் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. தமிழில் அலைபாயுதே படத்தில் மணிரத்னம் இயக்கத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் சாக்லேட் பாயாக வலம் வந்தார்.
பாலிவுட்டிலும் ரூ.100 கோடி படங்களில் நடித்துள்ளார். சிறிது இடைவெளிக்கு பின்பு தமிழிலும் இறுதிச்சுற்று, விக்ரம் வேதா என கலக்கி வருகிறார். இவர் தன்னுடைய பள்ளிப்பருவ ஆண்டு புத்தகத்தில் தான், 28 வருடத்திற்கு முன்பு எழுதியதை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் தன்னுடைய லட்சியம் என்பதில், பணக்காரனாக வேண்டும், பிரபல நடிகராக வேண்டும் என்று எழுதியிருக்கிறார்.
இந்த டிவிட்டுக்கு சூர்யா, உண்மை ப்ரோ என்று வாழ்த்தியுள்ளார்.
28 வருடத்திற்கு முன்பு சொன்ன விஷயம் நடந்தது - ஆச்சர்யமடைந்த மாதவன்!
Reviewed by Author
on
December 28, 2017
Rating:
No comments:
Post a Comment