புதிய மைல்கல்லை எட்டிய டிக்வெல்ல -
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 141 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நிர்ணியிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 392 ஓட்டங்களைப் பெற்றது.இதையடுத்து, 393 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 251 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்திருந்தது.இந்த போட்டியில் இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அஞ்சலோ மெத்திவ்ஸ் ஆட்டமிழக்காமல் 111 ஓட்டங்களைப் பெற்றக்கொடுத்தார்.
அதேபோல், நேற்றைய போட்டியில் இலங்கை அணியின் விக்கட் காப்பாளர் நிரோஷன் திக்வெல்ல சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆயிரம் ஓட்டங்கள் எனும் மைல்கல்லை எட்டினார்.
அவர் , நேற்றைய போட்டியில் 22 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.தற்போதைய நிலையில் , நிரோஷன் திக்வெல்ல 31 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் கலந்து கொண்டு 1001 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
2 சதங்கள் மற்றும் 5 அரைச்சதங்கள் அடங்களாக அவர் இந்த ஒட்டங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதிய மைல்கல்லை எட்டிய டிக்வெல்ல -
Reviewed by Author
on
December 15, 2017
Rating:
No comments:
Post a Comment