அண்மைய செய்திகள்

recent
-

முத்தரப்பு தொடரை கைப்பற்றி அசத்திய இலங்கை அணி: இலங்கை ஜாம்பவான்கள் வாழ்த்து -


வங்கதேசத்தில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரை இலங்கை அணி வென்றுள்ள நிலையில் இலங்கை ஜாம்பவான்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இலங்கை - வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகள் பங்குபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதி போட்டியில் இலங்கை - வங்கதேச அணிகள் மோதின.
இந்த போட்டியில் இலங்கை அணி 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
வெற்றி பெற்ற இலங்கை அணிக்கு அந்த அணியின் முன்னாள் வீரர்கள் பலர் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குமார் சங்ககாரா தனது பதிவில், நன்றாக செயல்பட்டீர்கள், நல்ல விடயங்கள் வர தொடங்குகின்றன என பதிவிட்டுள்ளார்.
ஜெயவர்தனே தனது பதிவில், நன்றாக விளையாடினீர்கள், இலங்கை வீரர்கள் மீண்டும் வலிமையுடன் தொடரில் திரும்பியது பெருமையாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
ருசல் அர்னால்ட் தனது பதிவில், கடினமான நேரத்தில் மிக சிறப்பாக செயல்பட்டதற்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய ஏஞ்சலா மேத்யூஸ் கூறுகையில், நல்ல நிலைக்கு அணி திரும்பியுள்ளது. பெரேரா, தரங்க, சண்டிமால் மற்றும் மொத்த அணியும் சிறப்பாக செயல்பட்டது என பதிவிட்டுள்ளார்.

இப்படி பல இலங்கை வீரர்கள் தங்கள் வாழ்த்து மழையை பொழிந்து வருகிறார்கள்.

முத்தரப்பு தொடரை கைப்பற்றி அசத்திய இலங்கை அணி: இலங்கை ஜாம்பவான்கள் வாழ்த்து - Reviewed by Author on January 28, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.