நடிப்பினால் அனைவரையும் சிரிக்க வைத்து கடைசியில் அழுது அழுதே மரணித்த பிரபல நடிகை -
ஒரு காலத்தில் ஆச்சி மனோரமாவுக்கு நிகராக காமெடியில் கொடி கட்டி பறந்தவர் நடிகை காந்திமதி. சுருளிராஜனுடன் இவர் ஜோடி போட்டு நடித்த படங்கள் அனைத்துமே பட்டையை கிளப்பும் ரகம்.
அதிலும் சுருளிராஜனுடன் சேர்ந்து நடித்த மாந்தோப்பு கிளியே என்னும் படம் இவரது நகைச்சுவைக்காகவே வெள்ளி விழா கொண்டாடியவை. இவருக்கு பணமும், புகழும் கொட்டியது.
திருமணம் செய்து கொள்ளவில்லை. தனக்கு கடைசி வரை உறவினர்கள் கை கொடுப்பார்கள் என்று நம்பினார். ஆனால் இங்குதான் விதி விளையாடியது.
இதய நோய் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். வயதானதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சினிமாவில் நடிப்பதை குறைத்து கொண்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் கடந்த 2011ம் ஆண்டு திடீரென இறந்து போனார்.
சில நடிகைகள் தனக்கென குடும்ப வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்வதில்லை. உறவினர்கள் குழந்தைகளை தன் குழந்தையை போல பாவித்து வளர்த்து வருகிறார்கள். கடைசியில் அவர்கள் தனது தாய், தந்தை சொந்தம் என போய் விடுகிறார்கள்.
நடிப்பினால் அனைவரையும் சிரிக்க வைத்து கடைசியில் அழுது அழுதே மரணித்த பிரபல நடிகை -
Reviewed by Author
on
January 28, 2018
Rating:
No comments:
Post a Comment