உலகின் உயரமான ஆணும், குள்ளமான பெண்ணும் பங்கேற்ற போட்டோ ஷூட்
துருக்கியை சேர்ந்த சுல்தான் கோசன் (35) என்ற ஆண் 8 அடி 1 அங்குலம் உயரம் உள்ள நிலையில் உலகின் உயரமான ஆணாக கருதப்படுகிறார்.
அதே போல இந்தியாவை சேர்ந்த ஜோதி அம்ஜ் (24) என்ற பெண் வெறும் 2 அடி உயரமே உள்ள நிலையில் உலகின் குள்ளமான பெண்ணாக வலம் வருகிறார்.
இவர்கள் இருவரின் பெயர்களும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் கடந்த 2011- ஆண்டு இடம்பெற்றது.
இந்நிலையில் எகிப்திய சுற்றுலா ஊக்குவிப்பு வாரியம், சுல்தான் மற்றும் ஜோதியை போட்டோ ஷூட் எடுப்பதற்காக தங்கள் நாட்டுக்கு அழைத்தது.
இதையடுத்து இருவரும் எகிப்து பிரமிடு உள்ள பகுதியில் விதவிதமாக புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தனர்.
ஒரு புகைப்படத்தில் சுல்தான் உட்கார்ந்திருக்கும் நிலையில் அவரருகில் ஜோதி நிற்கிறார். அதில் சுல்தானின் முட்டி அளவில் தான் ஜோதியின் மொத்த உயரமும் உள்ளது.
இது போல பல புகைப்படங்கள் எடுக்கப்பட்ட நிலையில் அனைத்தும் இணையத்தில் வைரலாகியுள்ளது.
உலகின் உயரமான ஆணும், குள்ளமான பெண்ணும் பங்கேற்ற போட்டோ ஷூட்
Reviewed by Author
on
January 27, 2018
Rating:
No comments:
Post a Comment