அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை வாழ் மக்கள் அறிய வேண்டிய முக்கிய விடயம்!


இலங்கையில் தொடர்ந்து வரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று அதிகாலை வரையில் 2,194 குடும்பங்களை சேர்ந்த 8,690 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அத்துடன், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் தங்கள் வசிப்பிடங்களை விட்டு தற்காலிகமாக பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, நாட்டில் எவ்வகையான அனர்த்தம் ஏற்பட்டாலும் எதிர்கொள்ளும் வகையில் முப்படையினரும், பொலிஸாரும், இடர்முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகளும் தயாராக உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அனர்த்தத்திற்கு முன்பு, பின்பு எவ்வாறான நடவடிக்கைகளை மக்கள் கையாள வேண்டும் என்பது தொடர்பான கையேடொன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கை வாழ் மக்கள் அறிய வேண்டிய முக்கிய விடயம்! Reviewed by Author on May 21, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.