அண்மைய செய்திகள்

recent
-

யாழ். வைத்தியசாலையில் வெற்றிகரமான சத்திரசிகிச்சை -9பது ஆண்டுகளாக சுவாச குழாயில் இரும்பு துண்டு!


சுவாசக் குழாயில் இருந்த சுமார் 50 கிராம் நிறையுடைய இரும்பு துண்டை அகற்றி இளைஞர் ஒருவருக்கு யாழ். போதன வைத்தியசாலையில் வெற்றிகரமான சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ். வைத்தியசாலையில் வரலாற்றில் நீணட காலத்திற்கு பின்னர் இவ்வாறான சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவருக்கே இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் குண்டுத் தாக்குதலின் போது இரும்பு பகுதி அவருக்குள் பாய்ந்துள்ளது.
இந்நிலையில், வவுனியாவுக்கு பொதுமக்களுடன் இடம்பெயர்ந்தார் அவர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார். அவருக்குக் குண்டின் பகுதி தாக்கியதாகக் கருதியே சிகிச்சை பெற்றார்.

“நாள்­ள் சென்றன, காயம் மாறியது. ஆனால் அதன் பின்னர் என்னால் பாரதூரமான வேலைகளைச் செய்ய முடிய வில்லை. நிமிர்ந்தோ சரிந்தோ படுத்துறங்க முடியாது, குப்புறவே படுத்து உறங்க முடியும்.
அவ்வாறு படுத்தாலும் இருமல் விடாது இருந்துகொண்டே இருக்­கும்” அதன் பின் “இருமல், தொல்லை தாங்கமுடியாது 2 வருடங்களின் பின்னர் 2011ம் ஆண்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தேன்.
அங்கு வைத்தியர்கள் எனது நெஞ்சுப் பகுதியை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த பின்னர்தான் இரும்புத் துண்டு ஒன்று எனது நெஞ்சறையில் உள்­ளது என்று கூறினர்.

எக்ஸ்ரே கதிர் மூலமாக எடுத்த படத்தையும் காண்பித்தனர். என்னால் அதை நம்பவே முடிய வில்லை” என குறித்த நபர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து குறித்த இளைஞர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பிலுள்ள இரண்டு வைத்தியசாலைக்குச் சென்றும் சிகிச்சை பெறமுடியாது திரும்பி வரவேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில், யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவருக்கு அங்கு இருதய நெஞ்சறை சத்திர சிகிச்சை நிபுணர் எம்.எஸ்.முகுந்தன் பரிசோதனை செய்து சத்திரசிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடந்த வியாழக்கிழமை சுமார் 6 மணித்தியாலங்கள் சத்திர சிகிச்சை செய்து இரும்புத் துண்டு அகற்றப்பட்டது. “குறித்த குண்டின் பகுதி வலதுபுற நுரையீரல் சுவாசக் குழாயில் தங்கி நின்றுள்ளது.

அது சுவாசப்பை ஊடாகவே சுவாசக் குழாய்குள் சென்றிருக்க வேண்டும் ஆனால் அது எப்படி நகர்ந்தது என்பது விசித்திரமாகவே உள்ளது.
குண்டின் பகுதி தங்கியிருந்த இடத்தில் சுவாசக்குழாய் விரிவடைந்து குழாய் சேதமடைந்து அதில் சளி தேங்கி அவருக்குச் சிக்கலைக் கொடுத்துக்கொண்டிருந்தது.

இரும்பினாலான அந்தக் குண்டின் பகுதி சுமார் 50 கிராம் நிறையுடையது” என்று சத்திரசிகிச்சை செய்த வைத்திய நிபுணர் முகுந்தன் தெரிவித்துள்ளார்.
யாழ். வைத்தியசாலையில் வெற்றிகரமான சத்திரசிகிச்சை -9பது ஆண்டுகளாக சுவாச குழாயில் இரும்பு துண்டு! Reviewed by Author on June 13, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.