கண்டியில் பதற்றம்: துப்பாக்கி சூடு: இருவர் பலி -
கண்டி - மடவல பகுதியில் விஷேட அதிரபடையினருக்கும் பாதாள உலக கோஷ்டியினருக்கும் இடையில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இருவர் பலியாகியுள்ளனர்.
இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பாதாள உலக கோஷ்டியினர் இருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாகந்துரே மதுஷ் என்ற பாதாள உலகத் தலைவரின் சகாக்களே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
மாகந்துரே மதுஷ் என்ற பாதாள உலகக்குழு தலைவர் துபாயில் தலைமறைவாகி வாழ்ந்து வருகிறார்.
கண்டியில் பதற்றம்: துப்பாக்கி சூடு: இருவர் பலி -
Reviewed by Author
on
June 09, 2018
Rating:
No comments:
Post a Comment