தமிழகத்தில் புதிய சாலை வசதி: நிதியுதவி அளிக்கும் சச்சின் டெண்டுல்கர் -
கிரிக்கெட் ஜாம்பவானும், பாராளுமன்ற உறுப்பினருமான சச்சின் டெண்டுல்கர், பெரம்பலூரில் எளம்பலூர் ஊராட்சியில் கோல்டன் சிட்டி என்ற பெயரில் அமைக்கப்பட்டு வரும் புதிய சாலை வசதிக்கு, தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20.70 லட்சம் நிதியுதவி அளிக்க உள்ளார்.
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா கூறுகையில், சச்சின் கொடுக்கும் நிதியிலிருந்து மொத்தமாக 500 மீட்டர் நீளத்திலும் 3.75 மீட்டர் அகலத்திலும், 20செமீ தடிமன் அளவிலும் சாலை அமைக்கப்படும். முழு நீள சாலை வழி அமைப்பதற்கான செயல்முறை தற்போது உள்ளது.
இதன் வேலைகள் அனைத்தும் விரைவில் துவங்கி 75 நாட்களில் முடிவடைந்துவிடும் என தெரிவித்தார். மேலும் இதன் பணிகள் நிறைவடைந்தவுடன் சச்சின் வந்து பார்வையிட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் புதிய சாலை வசதி: நிதியுதவி அளிக்கும் சச்சின் டெண்டுல்கர் -
Reviewed by Author
on
July 02, 2018
Rating:
No comments:
Post a Comment