அண்மைய செய்திகள்

recent
-

மாகாணசபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு கோரிக்கை -


ஆயுட்காலம் நிறைவடைந்த மாகாணசபைகளின் தேர்தல்கள் பழைய அல்லது புதிய முறையில் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.

இதேவேளை தேர்தல் திருத்தச்சட்டமூலம் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இது தொடர்பில் வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

ஏற்கனவே கிழக்கு வட மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணசபைகளின் ஆயுட்காலம் நிறைவடைந்துள்ளது.
எனினும் அரசாங்கம் இன்னும் மாகாணசபை திருத்த சட்டமூலத்தை நிறைவேற்றவில்லை.

எனவே பழைய முறையிலாவது மாகாணசபை தேர்தலை நடத்தவேண்டும் என்று சுமந்திரன் கோரியுள்ளார்.

மாகாணசபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு கோரிக்கை - Reviewed by Author on July 02, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.