300க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நடுக்கடலில் தீப்பற்றி எரியும் படகு! -
பால்டிக் கடலில் லிதுவேனியன் கொடியுடன் பயணித்த படகு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
335 பேருடன் பயணித்த படகிலேயே தீ பரவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரேன் நாட்டை அண்மித்த பால்டிக் கடலில் பயணித்த படகிலேயே குறித்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
ஜேர்மானியின் துறைமுகம் ஒன்றில் இருந்து லிதுவேனியன் நோக்கி அந்தக் கப்பல் சென்று கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த படகின் இயந்திர அறையில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதையடுத்தே தீ பரவியுள்ளதாகவும், மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
300க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நடுக்கடலில் தீப்பற்றி எரியும் படகு! -
Reviewed by Author
on
October 03, 2018
Rating:
No comments:
Post a Comment