அண்மைய செய்திகள்

recent
-

நீதிமன்ற தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து பொலிஸ் மா அதிபர் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு -


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ள நிலையில், நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உயர் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் நாட்டின் பொலிஸ் நிலையங்களுக்கு விசேட பொலிஸ் செய்தி ஒன்றின் ஊடாக பொலிஸ் மா அதிபர் இந்த உத்தரவினை இன்று இரவு பிறப்பித்துள்ளார்.

சில தரப்பினர் நாச வேலைகளில் ஈடுபடக்கூடிய சாத்தியங்கள் காணப்படும் நிலையில் பொலிஸ் மா அதிபர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, தங்களது பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறும் அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இரண்டு நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டுமெனவும் பொலிஸ் மா அதிபர், பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து பொலிஸ் மா அதிபர் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு - Reviewed by Author on November 14, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.