அண்மைய செய்திகள்

recent
-

லண்டனில் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவிற்கு பிடியாணை! அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை -


பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவிற்கு எதிரான பிடியாணையை மறுபரிசீலனை செய்யுமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு பிரித்தானியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிசை சந்தித்து இந்த வேண்டுகோளை விடுத்துள்ள வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்
லண்டனின் தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி பிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிராக லண்டன் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே, குறித்த படியாணையை மறுபரிசீலனை செய்யுமாறு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி, பிரியங்க பெர்ணான்டோ குறித்து பின்பற்றப்பட்ட நடைமுறைகளை மறுபரிசீலனை செய்யுமாறு அவர் பிரித்தானிய தூதுவரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் பிரியங்க பெர்ணான்டோவிற்கு எதிராக வழங்கப்பட்டுள்ள பிடியாணை மற்றும் பிணையில்லாத பிடியாணை குறித்து சுட்டிக்காட்டியுள்ள ரவிநாத் ஆரியசிங்க இது சர்வதேச சட்டங்களிற்கு முரணானது எனவும் தெரிவித்துள்ளார்.
லண்டனில் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவிற்கு பிடியாணை! அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை - Reviewed by Author on January 26, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.