அண்மைய செய்திகள்

recent
-

இலங்கைக்கு உலக வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை! -


இலங்கையில் ஏற்படும் அரசியல் உறுதியற்ற தன்மை காரணமாக இந்த ஆண்டு கடும் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் அபிவிருத்தி தொடர்பில் உலக வங்கி வெளியிட்டுள்ள பிந்திய அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,

“2019ஆம் ஆண்டு, இலங்கையின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டு கணிக்கப்பட்டதை விட, சற்று அதிகமாக இருக்கும். 2019ஆம் ஆண்டு இலங்கையில் பொருளாதார வளர்ச்சி 3.1 வீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது.

எனினும், இந்த ஆண்டு வளர்ச்சி 3.5 வீதமாக அதிகரிக்கும். எவ்வாறயினும், இந்த ஆண்டு இலங்கை கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்.
அதிகளவு கடன் மீளளிப்பு, பூகோள நெருக்கடிகள் மற்றும் தேர்தல்களால் ஏற்படக் கூடிய அரசியல் உறுதியற்ற நிலை போன்றவற்றினால், இலங்கை இவ்வாறு நெருக்கடிகளை எதிர்நோக்க கூடும்” என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு உலக வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை! - Reviewed by Author on February 16, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.