பறவைகளின் காதலுக்காக சுவிஸ் தேவாலயம் எடுத்துள்ள முடிவு! -
அழகான ஒரு கூடு அமைக்கப்பட்டு, வரும் பறவைகள் தேவாலயத்தின் கூரையில் வந்து தங்குவதற்காக ஒரு சிறப்பு கதவும் அமைக்கப்பட்டது.
என்றாலும், இவ்வளவு செலவு செய்த பின்னரும்கூட, ஐந்து ஆண்டுகளாக அந்த கூட்டிற்கு பறவைகள் எதுவும் வரவில்லை.
2016ஆம் ஆண்டு, பறவைகள், இனப்பெருக்கத்திற்காக இணை சேரும் காலமாகிய பிப்ரவரி மார்ச் மாதத்தில், தேவாலய மணியை ஒலிப்பதை நிறுத்த தேவாலயம் முடிவு செய்தது.
அந்த முடிவு ஒரு நன்மையைக் கொண்டு வந்துள்ளது, ஆம், பறவைகள் வரத்தொடங்கி விட்டன.
இதனால் அவைகளை தொந்தரவு செய்யாமல் இருப்பதற்காக காலவரையரையின்றி தேவாலய மணி ஒலிப்பது நிறுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக ஒவ்வொரு கோடையிலும் சுவிட்சர்லாந்துக்கு நாரைகள் வருவது வழக்கம்.
தெற்கு ஐரோப்பா மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் குளிர் காலத்தை முடித்த பின்பு, நாரைகள் இளவேனிற்காலத்தின் துவக்கத்தில் சுவிட்சர்லாந்துக்கு திரும்புகின்றன.
பறவைகளின் காதலுக்காக சுவிஸ் தேவாலயம் எடுத்துள்ள முடிவு! -
Reviewed by Author
on
March 20, 2019
Rating:
No comments:
Post a Comment