நாட்டில் இடம் பெற்ற குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு மன்னாரில் அஞ்சலி நிகழ்வு-படங்கள்
நாட்டில் கடந்த 21 ஆம் திகதி இடம் பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை கண்டித்தும், குறித்த சம்பவங்களின் போது உயிரிழந்த மக்களின் ஆத்மா சந்தியடையவும், அஞ்சலி நிகழ்வு மன்னாரில் இன்று வியாழக்கிழமை (25) காலை இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தில் அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் இடம் பெற்றது.
இதன் போது சர்வமதத்தலைவர்கள்,மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள்,உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்
இதன் போது கலந்து கொண்டிருந்தவர்கள் கருப்பு பட்டி அணிந்து குறித்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
உயிர் நீத்த மக்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு மலர் தூவி,சுடர் ஏற்றி அஞ்சலி நிகழ்வுகள் இடம் பெற்றது.
கடந்த 21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று நாட்டில் தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் குண்டுத்தாக்குதல் இடம் பெற்றுள்ளது.
குறித்த தாக்குதலின் போது 350 இற்கும் மேற்பட்டவர்கள் பலியானதோடு,பல நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்தும்,உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் குறித்த நிழக்வு இடம் பெற்றது.இதன் போது சர்வ மத தலைவர்களின் உரைகளும் இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தில் அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் இடம் பெற்றது.
இதன் போது சர்வமதத்தலைவர்கள்,மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள்,உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்
இதன் போது கலந்து கொண்டிருந்தவர்கள் கருப்பு பட்டி அணிந்து குறித்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
உயிர் நீத்த மக்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு மலர் தூவி,சுடர் ஏற்றி அஞ்சலி நிகழ்வுகள் இடம் பெற்றது.
கடந்த 21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று நாட்டில் தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் குண்டுத்தாக்குதல் இடம் பெற்றுள்ளது.
குறித்த தாக்குதலின் போது 350 இற்கும் மேற்பட்டவர்கள் பலியானதோடு,பல நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்தும்,உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் குறித்த நிழக்வு இடம் பெற்றது.இதன் போது சர்வ மத தலைவர்களின் உரைகளும் இடம் பெற்றது.
நாட்டில் இடம் பெற்ற குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு மன்னாரில் அஞ்சலி நிகழ்வு-படங்கள்
Reviewed by Author
on
April 25, 2019
Rating:
No comments:
Post a Comment