அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையின் கடற்பரப்பிற்குள் அமெரிக்க போர்க்கப்பல் -


இலங்கை கடற்படையுடன் கூட்டு பயிற்சிகளில் ஈடுப்படுவதற்காக அமெரிக்காவின் கடற்படைக்கு சொந்தமான இரண்டு போர்க்கப்பல்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
யு.எஸ்.என்.எஸ் "மில்லிநோகேட் " மற்றும் யு.எஸ்.எஸ் "இஸ்ப்ருவன்ஸ் " ஆகிய இரண்டு கப்பல்களே இவ்வாறு இன்று அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்துள்ளன.

குறித்த போர்க்கப்பல்கள் இரண்டும் இலங்கை கடற்படை மரபுகளுக்கு அமைய வரவேற்கப்பட்டன. மேலும், இவ்விரண்டு போர்க்கப்பல்களும் இலங்கை கடற்படை கப்பல்களுடன் இணைந்து தமது கடற்படை பயிற்சிகளை முன்னெடுக்கவுள்ளன.
யு.எஸ்.என்.எஸ் மில்லிநோகேட் போர் கப்பலானது 2362 தொன் நிறைகொண்டதுடன் 155.3 மீட்டர் நீளம் கொண்டதாகவும், அதேபோல் யு.எஸ்.எஸ் இஸ்ப்ருவன்ஸ் கப்பலானது 9580 தொன் நிறை கொண்டதாகவும் காணப்படுகின்றது.

இரண்டு நாடுகளுக்கு இடையில் பாதுகாப்பு நட்புறவு வலுவடைந்துள்ள நிலையில் இரு நாடுகளின் கடற்படை அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கிலும் நட்புறவை மேலும், வலுப்படுத்தும் வகையிலும் இந்த கூட்டு கடற்படை பயிற்ச்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் கடற்பரப்பிற்குள் அமெரிக்க போர்க்கப்பல் - Reviewed by Author on April 19, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.