அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை -
ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் எந்தவொரு அரசாங்க ஊழியரும் அரசியல்வாதிகளுக்கு சாதகமாக செயற்படக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று விடுத்துள்ளார்.
வைத்தியர்கள் உட்பட அனைத்து அரச ஊழியர்களும் அரசியல்வாதிகளுக்கு நன்மை ஏற்படுத்தக் கூடிய வகையில் செயற்பட கூடாதென அவர் கூறியுள்ளார்.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு தங்கள் பேஸ்புக் கணக்குகளை பயன்படுத்தி பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் இந்த தகவல்களை வெளியிட்டார்.
அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை -
Reviewed by Author
on
October 16, 2019
Rating:
No comments:
Post a Comment