வடக்கில் முன்னெடுத்துவரும் அபிவிருத்தி திட்டங்களை பார்வையிட்ட ரணில் -
யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க வடக்கில் முன்னெடுத்து வரும் அபிவிருத்தி திட்டங்களை பார்வையிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பிரதேசத்தில் தேசிய கொள்கைகள் மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் 80 மில்லியன் ரூபா பெறுமதியான வீட்டுத்திட்டத்தினை பார்வையிட்டார்.
குறித்த வீட்டுத்திட்டத்தில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான 100 க்கும் மேற்பட்ட வீடுகள் 5 பொது கிணறுகள் மலசல கூடங்கள் என்பன உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மாவை சேனாதிராஜா அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் மாநகரசபை முதல்வர் அனோல்ட் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வடக்கில் முன்னெடுத்துவரும் அபிவிருத்தி திட்டங்களை பார்வையிட்ட ரணில் -
Reviewed by Author
on
October 16, 2019
Rating:
No comments:
Post a Comment