மூன்று மாகாணங்களின் ஆளுநர்களையும் ஒரே நேரத்தில் சத்தியப்பிரமாணம் செய்யமாறு கூறிய கோட்டாபய!
வடக்கு, கிழக்கு, வட மத்திய மாகாண ஆளுநர்கள் மூவரையும் ஒரே தடவையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்ததாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
ஆறு மாகாணங்களின் ஆளுநர்கள் சத்தியப்பிரமாணம் செய்துள்ள நிலையில் மூன்று மாகாண ஆளுநர்கள் இன்னமும் சத்தியப்பிரமாணம் செய்து தங்களது கடமைகளை பொறுப்பேற்கவில்லை. இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
வடமாகாணத்துக்கான ஆளுநர் நியமனத்தில் ஏற்பட்டிருக்கும் தாமதத்தினாலே ஏனைய இரண்டு மாகாண ஆளுநர்களும் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு, வட மத்திய மாகாணங்களுக்கான ஆளுநர்களாக யாரை நியமிப்பதென்ற தீர்மானம் எடுப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டிருந்தது.
எனினும் கிழக்கு மாகாண ஆளுநராக என்னை நியமிப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அதன் பிரகாரம் எனக்கான நியமனக்கடிதமும் தயாரிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதும் ஆளுநர்கள் நியமிக்கப்படவிருக்கும் வடமத்திய மற்றும் வட மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்பட்ட பின்னர் மூன்றுபேரும் ஒரேதடவையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளுமாறு ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார். அதனால்தான் நான் சத்தியப்பிரமானம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றார்.
மூன்று மாகாணங்களின் ஆளுநர்களையும் ஒரே நேரத்தில் சத்தியப்பிரமாணம் செய்யமாறு கூறிய கோட்டாபய!
Reviewed by Author
on
November 26, 2019
Rating:
No comments:
Post a Comment