அண்மைய செய்திகள்

recent
-

கொரொனா வைரஸ்-பிரித்தானியாவில் 20000 பேர் உயிரிழக்கும் ஆபத்து -

பிரித்தானியாவில் 20 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக பிரித்தானிய அரசாங்கத்தின் தலைமை அறிவியல் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
இந்த வாரம் பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட கடுமையான சமூக ஆய்வு நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த அறிவிப்பை பிரித்தானிய அரசாங்கத்தின் தலைமை அறிவியல் ஆலோசகர் Sir Patrick Vallance தெரிவித்துள்ளார்.

அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொடர்பாக அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் சுமார் 55,000 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதன் விளைவாக 20,000 மக்கள் உயிரிழக்க நேரிடலாம் என அரசாங்கத்தின் தலைமை அறிவியல் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய அரசாங்கத்தால் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள சமூக திட்டங்களை மீறி சுகாதார சேவை பாரிய அளவில் பாதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பாரிய இறப்புகளை சந்திக்க நேரிடும் என அவர் கூறியுள்ளார். அத்துடன் இந்த விடயம் சுகாதார துறைக்கு பாரிய அழுத்தத்தை ஏற்படுத்தும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரொனா வைரஸ்-பிரித்தானியாவில் 20000 பேர் உயிரிழக்கும் ஆபத்து - Reviewed by Author on March 18, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.