அண்மைய செய்திகள்

recent
-

எனது பெயரை பயன்படுத்தி அரச நிறுவனங்கள் மீது எவரும் அழுத்தம் பிரயோகித்தால், உடன் அறியத்தரவும்...-ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவிப்பு...

எனது பெயரை பயன்படுத்தி அரச நிறுவனங்கள் மீது எவரும் அழுத்தம் பிரயோகித்தால், உடன் அறியத்தரவும்:
சில மோசடிக்காரர்கள் தமது நோக்கங்களை அடைந்துகொள்வதற்காக - எனது பெயர், போலியாக தயாரித்த எனது கையொப்பம், போலியான கடிதத் தலைப்பு என்பவற்றை பயன்படுத்தி -
அமைச்சுக்கள், திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு அழுத்தங்களைக் கொடுத்துவருவது பற்றி தொடர்ச்சியாக தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன.
இத்தகைய நபர்கள், சில அரச நிறுவனங்களுக்குத் தனிப்பட்ட முறையில் சென்று, தமது சில பணிகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாகத் தெரியவந்துள்ளது.
இந்த அழுத்தங்கள் எனது பணிப்புரையின் பேரிலேயே கொடுக்கப்படுவதாகவும் அந்த மோசடிக்காரர்கள் தெரிவிப்பதாகவும் எனக்குத் தெரியவந்துள்ளது.
அரச பொறிமுறைக்கு வழங்கப்பட்டுள்ள கடமைப் பொறுப்புக்களை அரச பணியாளர்கள் உரிய முறையில் நிறைவேற்றுவது தொடர்பில் எனது காலத்தில் நான் முன்னுரிமை அளித்து நோக்குவேன் என்பதுடன்,
சில பணிகளை மேற்கொள்வதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ள அரச அதிகாரிகள் - சட்டத்திற்கு அமைவாக, பொது மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அரச பொறிமுறையைச் செயற்படுத்த வேண்டும் என்பதும் எனது எதிர்பார்ப்பாகும்
எனவே எவரேனும் எனது பெயரை பயனபடுத்தி அழுத்தங்களை மேற்கொள்வார்களேயானால் அல்லது அரச அதிகாரிகளிடத்தில் செல்வாக்குச் செலுத்த முற்படுவார்களேயானால் -
அது பற்றி, உடனடியாக, ஜனாதிபதி அலுவலகத்தின் உள்ளக நிர்வாக பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கே. பீ. எகொடவெலே அவர்களுக்கு -
011 235 4479 அல்லது 011 235 4354 என்ற இலக்கங்கள் ஊடாகத் தொடர்புகொண்டு அறியத்தரவும். என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்...




எனது பெயரை பயன்படுத்தி அரச நிறுவனங்கள் மீது எவரும் அழுத்தம் பிரயோகித்தால், உடன் அறியத்தரவும்...-ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவிப்பு... Reviewed by Author on June 09, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.