அண்மைய செய்திகள்

recent
-

சமாதான நீதவான்கள் என்றால் யார்? அவர்களின் பணி என்ன? தெரிந்துகொள்ளுங்கள்

சமாதான நீதவான் பற்றி அறியாதவர்கள் இச் சமூகத்தில் மிகக் குறைவு. சாதாரண மக்களுக்கு ஏதாவதொரு ஆவணம் அல்லது சத்தியக்கூற்று போன்றவற்றினை அத்தாட்சிப்படுத்த வேண்டுமானால் உடனே ஞாபகத்தில் வருபவர் சமாதான நீதவான் ஆகும்.

 இச்சமாதான நீதவான் எனப்படுபவர் சமூகத்தில் நல்ல குணங்களையும் மதிப்பினையும் உடைய நபர்களாக காணப்படுவதுடன் மரியாதைக்குரிய நற்பிரஜைகளாகவும் காணப்படுவார்கள்.

 இவ்வாறமைந்த சமாதான நீதவானின் வரலாற்றுப் பிண்ணனியை நோக்கினால், வரலாற்றுப் பிண்ணனி இப்பதவி நிலையானது இன்றைக்கு 12ம் நூற்றாண்டிலிருந்து தோற்றம் பெற்றதொன்றாகும். இது 1195ம் ஆண்டில் முதலாம் றிச்சார்ட் மன்னனினால் அறிமுகப்படுத்தப்பட்டதொன்றாகும்.

 இதன் பிரகாரம் நியமிக்கப்பட்ட நபர்கள் அக்காலத்தில் சட்டத்தை மதிக்காது சமூகத்தில் குழப்பத்தினை உண்டு பண்ணும், கட்டுப்படுத்த முடியாத நபர்கள் வாழும் பிரதேசங்களில், சமூகங்களில் சமாதானத்தினை ஏற்படுத்தி அதனைப் பேணுவதனை பிரதானமான கடமையாக கொண்டிருந்ததுடன் இவர்கள் சமூகத்தில் சட்டமானது ஒழுங்காக பேணப்படுகின்றது என்பதனை மன்னனிடம் உறுதிசெய்பவர்களாகவும் காணப்பட்டனர்.

இதனால் இவர்கள் “சமாதானத்தின் பாதுகாவலர்கள்” எனவும் அழைக்கப்பட்டனர். இப்பதவி நிலைக்கு 1327ம் ஆண்டின் பின்னர் சட்டத்தினை மதிக்கக் கூடிய நல்ல பழக்கவழக்கமுடைய நபர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் சமூகத்திலுள்ள சட்டத்தை மதிக்காத நபர்களின் நடவடிக்கைகளினை கட்டுப்படுத்துபவர்களாகக் காணப்பட்டனர்.

 இதனைத்தொடர்ந்து 1361ம் ஆண்டிலிருந்து “சமாதானத்தின் பாதுகாவலர்கள்” என்பதற்கு பதிலாக “சமாதான நீதவான்” என்ற தலைப்பு முன்றாம் எட்வர்ட் மன்னனின் காலப்பகுதியில் வழங்கப்பட்டது. இக் காலப்பகுதியில் இவர்களுக்கு சமூகத்தில் சமாதானத்தினை குழப்பி அசாதாரண நிலையை உண்டு பண்ணும் நபர்களினை கட்டுப்படுத்துவதற்கும், திருத்துவதற்கும் அதிகாரம் வழங்கப்பட்டது.

 ஆனால் இவர்களுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து 16ம் நூற்றாண்டில் இவர்கள் “நீதவான்” எனவும் அழைக்கப்பட்டனர். தொழிற் புரட்சியினைத் தொடர்ந்து சமாதான நீதவான் என்ற பதவிநிலை பிரித்தானிய அரசாங்க முறைமையில் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக காணப்பட்டது.

 இதன் கீழ் பல அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நபர்களினை பிரித்தானிய அரசாங்கம் சமாதான நீதவானாக நியமித்தது. இருந்த போதிலும் இப்பதவி நிலை ஊதியமற்றதொன்றாக காணப்பட்டது. பிரித்தானிய அரசாங்கத்தினர் தம் நாட்டில் மட்டுமல்லாது தமது காலணித்துவ நாடுகளிலும் தமது அரசாங்க வேலைகள் சரிவர நடைபெற வேண்டும் என்ற நோக்குடன் பல நபர்களை காலணித்துவ நாடுகளில் இருந்து தெரிவு செய்து சமாதான நீதவான்களாக நியமித்தனர்.

 அதேவேளை 1919ம் ஆண்டு வரை சமாதான நீதவான்களாக பதவி நிலை வகிக்க பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தவொன்றாகும். ஆனால் தற்போது பிரித்தானியாவில் காணப்படும் சமாதான நீதவான்களில் 50க்கும் மேல் ஆனவர்கள் பெண்களாகும். தற்காலத்தில் கனடா, அவுஸ்ரேலியா, அமெரிக்கா மற்றும் பல நாடுகளில் நாட்டுக்கு நாடு வேறுபட்ட வகையில் அதிகாரங்கள் வழங்கப்பட்டு சமாதான நீதவான்கள் நியமிக்கப்படுகின்றனர்.

 இந்நிலையில் இலங்கையில் சமாதான நீதவானின் நிலை, இலங்கையைப் பொறுத்த மட்டில் சமாதான நீதவான் என்ற பதவி நிலையானது ஆளுனர் பிரடரிக் நோர்த்தினால் 1801ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் கீழ் சமாதான நீதவான்களாக நியமிக்கப்பட்ட நபர்கள் பிரித்தானிய அரசாங்க நிர்வாக முறையானது சமூகத்தில் சமாதானமாக இடம் பெற உதவுபவர்களாக காணப்பட்டனர். இவர்களது அதிகாரங்கள் 1871ம் ஆண்டில் மீள வடிவமைக்கப்பட்டது.



சமாதான நீதவான்கள் என்றால் யார்? அவர்களின் பணி என்ன? தெரிந்துகொள்ளுங்கள் Reviewed by Author on October 08, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.