அண்மைய செய்திகள்

recent
-

பருத்தித்துறையைச் சேர்ந்த இருவர் மீது நடுக்கடலில் வைத்து இரவிரவாக தாக்குதல்

பருத்தித்துறை எரிஞ்ச அம்மன் கோவிலடியை சேர்ந்த இருவர் மீன் பிடிக்க கடலுக்கு சென்ற போது நடுக்கடலில் வைத்து முகமூடி அணிந்த ஒன்பது பேர் குறித்த இருவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு இடம் பெற்றுள்ளது. 

 நேற்று பிற்பகல் கடல் தொழிலுக்காக பருத்தித்துறை எரிஞ்ச அம்மன் கோவிலடியிலிருந்து இருவர் சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் நாகர்கோவில் கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டு இருந்துள்ளனர். இதன்போது மூன்று படகுகளில் வந்த முகமூடி அணிந்த ஒன்பது பேர் தொழிலில் ஈடுபட்ட இருவரையும் சுற்றி வளைத்து இரவு 7:00 மணியிலிருந்து அதிகாலை இரண்டு மணிவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

 அவர்கள் தாக்குதல் நடாத்தும் போது “நீங்கள் தானே எம்மை கடலட்டை தொழில் செய்ய விடாது தடுத்தது”, என கேட்டுக் கேட்டு கடுமையாக தாக்கியுள்ளனர்.

பருத்தித்துறையைச் சேர்ந்த இருவர் மீது நடுக்கடலில் வைத்து இரவிரவாக தாக்குதல் Reviewed by Author on October 23, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.