நான்கு வாரங்களுக்கு நாடு முடக்கப்படுமா..?
அதனால், நாட்டை 4 வாரங்களுக்கு முடக்குவது அத்தியாவசியமானது என அரசாங்கத்திடம் சுகாதார தரப்பு குறிப்பிட்டுள்ளது.
நாளாந்தம் 3000தை அண்மித்த தொற்றாளர்களும், நாளாந்தம் 100ஐ அண்மித்த உயிரிழப்புக்களும் பதிவாகி வருவதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 13 நாட்களில் மாத்திரம் 1000 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், பெரும்பாலான வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றில் உயிரிழந்தோரின் சடலங்கள் பெருமளவு காணப்படுவதாகவும், கொவிட் தொற்றாளர்களினால் வைத்தியசாலைகள் நிரம்பியுள்ளதாகவும் சுகாதார தரப்பு கூறுகின்றது.
நோயாளர்களின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என சுகாதார தரப்பினர் கோரியுள்ளனர்.
நான்கு வாரங்களுக்கு நாடு முடக்கப்படுமா..?
Reviewed by Author
on
August 10, 2021
Rating:
No comments:
Post a Comment