அண்மைய செய்திகள்

recent
-

மாவிட்டபுரம் பொலிஸ்நிலையத்திற்கு அருகில் அடி காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் பகுதியில் உயிரிழந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று மாலை மாவிட்டபுரம் பொலிஸ் நிலையத்திற்கு அண்மித்த வீதியோரத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் அடி காயங்களுடன் சடலம் ஒன்று காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. 

பொலிஸார் அங்கு சென்று பார்த்தபோது மோட்டார் சைக்கிள் ஒன்றும் 03 சோடி செருப்புக்களும் காணப்பட்டிருக்கின்றன. மோட்டார் சைக்கிளுக்கு அருகில் காணப்பட்ட சடலம் நோயாளர் காவு வண்டி ஊடாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் தெல்லிப்பழை நல்லிணக்கபுர்தினைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான மதியாபரணம் ஜெனூசன் (வயது-24)  என்று தெரியவந்துள்ளது மல்லாகம் பகுதியில் நடைபெற்ற மரணச் சடங்கு ஒன்றுக்குச் சென்றிருந்தவரே அடி காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மோதல் எவ்வாறு இடம்பெற்றது போன்ற விரிவான தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை.

மாவிட்டபுரம் பொலிஸ்நிலையத்திற்கு அருகில் அடி காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு Reviewed by Author on September 16, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.