அண்மைய செய்திகள்

recent
-

சோகச் செய்தி பிரித்தானியாவில் தீ விபத்தில் சிக்கி ஈழத்தை சேர்ந்த ஒரே குடுப்பத்தை சேர்ந்த நால்வர் பலி

பிரித்தானியா Bexleyheath எனும் இடத்தில் வீட்டில் இடம்பெற்ற தீ விபத்தில் திருகோணமலை சேர்த்த ஓரே குடும்பத்தை சேர்த்த நால்வர் உயிரிழந்துள்ளனர் . இந்த துயர சம்பவம் நேற்று இரவு பிரித்தானியா நேரம் இரவு 8 .30 நடைபெற்றுள்ளது தாயும் மகளும் மற்றும் மகளின் இருபிள்ளைகளுமே உயிரிழந்துள்ளனர் தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்   

வீட்டிற்குள்ளிருந்து பயங்கர அலறல் சத்தம் கேட்டது – வீட்டின் வெளியே ஒருவர் அதிர்ச்சியால் மயங்கி விழுந்தார்- லண்டன் தீ விபத்து குறித்து அயலவர்கள் வீட்டிற்குள்ளிருந்து பயங்கர அலறல் சத்தம் கேட்டது முதலாம் மாடியில் பெரும்தீயை பார்த்தோம் என அயல்வீட்டில் வசிக்கும் லிங் ஹான் தெரிவித்துள்ளார். 

அவசரசேவை பிரிவினர் குழந்தைகளை காப்பாற்ற முயல்வதை பார்த்தேன் அவர்கள் கடுமையாக முயன்றனர் அவர்கள் தங்கள் முயற்சியை கைவிடவில்லை குழந்தைகளையும் காப்பாற்ற முயன்றனர் நான் அதிர்ச்சியடைந்தேன் எனது உடல் அதிர்ச்சியில் நடுங்கியது அவர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது தெரியாத நிலையில் நான் காணப்பட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். 

கடும் அதிர்ச்சியில் நபர் ஒருவர் மதிலின் அருகில் மயங்கி விழுவதை பார்த்தேன் என அயலில் வசிக்கும் ஸ்கொட் ஜேம்ஸ் தெரிவித்துள்ளார். அந்த வீடு வேகமாக தீப்பிடித்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். என்னால் புகைமண்டலத்தை தாங்க முடியவில்லை முழு வீடும் தீயில் சிக்கியது,என தெரிவித்துள்ள அவர் முதலில் கீழ்மாடிதீப்பிடித்தது பின்னர் மேல்மாடி தீப்பிடித்தது வெடிப்பு சம்பவம் எதுவும் நிகழவில்லை என குறிப்பிட்டுள்ளார்.


















சோகச் செய்தி பிரித்தானியாவில் தீ விபத்தில் சிக்கி ஈழத்தை சேர்ந்த ஒரே குடுப்பத்தை சேர்ந்த நால்வர் பலி Reviewed by Author on November 19, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.