அண்மைய செய்திகள்

recent
-

தேவாலயத்திலிருந்து கைக்குண்டு மீட்பு: ஐ.தே.க வேட்பாளரின் தந்தை கைது

பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்தாகும். பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் இருந்து கடந்த 11 ஆம் திகதி கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கடந்த திங்கட்கிழமை (17) கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் பிலியந்தலையில் வைத்தியர் ஒருவரை கைது செய்துள்ளனர். 

 கைது செய்யப்பட்ட வைத்தியர் இன்று கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட வைத்தியர் சமூக ஊடக செயற்பாட்டாளரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கடந்த பொதுத் தேர்தல் வேட்பாளருமான ஓஷல ஹேரத்தின் தந்தையாவார். 75 வயதான அவர் ஓய்வுபெற்ற அரச வைத்தியர் என ஓஷல ஹேரத் குறிப்பிட்டார்.

தேவாலயத்திலிருந்து கைக்குண்டு மீட்பு: ஐ.தே.க வேட்பாளரின் தந்தை கைது Reviewed by Author on January 20, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.