அண்மைய செய்திகள்

recent
-

மழையுடனான காலநிலை – சிறுவன் உட்பட இருவர் உயிரிழப்பு!

நாட்டில் நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, நெலுவ – எம்பலேகெதர வீதியில் பாலம் ஒன்றை கடக்க முற்பட்ட சிறுவனொருவன் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் எம்பலேகெதர பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவனொருவனே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

 இதேவேளை, ஹங்குராங்கெத்த, ஹேவாஹெட்ட – முல்லோயா தோட்ட மேல் பிரிவில் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் பெண்னொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 55 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

மழையுடனான காலநிலை – சிறுவன் உட்பட இருவர் உயிரிழப்பு! Reviewed by Author on April 10, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.