அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் மீன்பிடிக்க சென்ற மீனவன் கடலில் விழுந்து பலி

மன்னார் செளத்பார் பகுதியில் மீன்பிடிப்பதற்காக வலைபாய்ச்ச சென்ற மீனவன் எதிர்பாராத விதமாக மன்னார் புகையிரத பாலத்திற்கு அருகாமையில் உள்ள பல்லத்தில் விழுந்து காணாமல் போன நிலையின் இன்றையதினம் சனிக்கிழமை(14) சடலமாக மீட்கப்பட்டுள்ளார் மேற்படி ஜாக்கிலின் றாகல் என்ற 29 வயதுடைய மீனவரே நேற்றைய தினம் மதியம் அளவில் கடலுக்குள் விழுந்த நிலையில் உள்ளூர் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து குறித்த நபரை தேடும் பணியில் ஈடுபட்டனர் 

இருப்பினும் குறித்த நபர் மீட்கப்படாத நிலையில் இன்றைய தினம் செளத்பார் பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஜாக்கிலின் றாகலின் சடலத்தை மீட்டுள்ளனர் ஜாக்கிலின் திருமணமானவர் என்பதுடன் 4 வயது மற்றும் 2 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையும் ஆவர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் பொலிஸார் மரணம் குறித்து மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்








மன்னாரில் மீன்பிடிக்க சென்ற மீனவன் கடலில் விழுந்து பலி Reviewed by Author on May 14, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.