யாழில் வீட்டில் சட்டவிரோத கருக்கலைப்பால் பெண் உயிரிழப்பு; சம்பவத்தால் அதிர்ச்சி
யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் சட்டவிரோதமான கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்துள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
வீடொன்றில் சட்டவிரோதமான கருக்கலைப்பினை மேற்கொண்ட போது , அதீத இரத்த பெருக்கு காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அதீத இரத்த பெருக்கே உயிரிழப்புக்கு காரணம் என மரண விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் , சுன்னாக பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் வீட்டில் கருகலைப்பால் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யாழில் வீட்டில் சட்டவிரோத கருக்கலைப்பால் பெண் உயிரிழப்பு; சம்பவத்தால் அதிர்ச்சி
Reviewed by Vijithan
on
June 11, 2025
Rating:

No comments:
Post a Comment