அண்மைய செய்திகள்

recent
-

களனி ஆற்றில் பிள்ளையை வீசிய தாய் தற்கொலை முயற்சி; பொலிஸாரால் கைது

வத்தளை – கதிரான பாலத்திற்கருகில் தமது பிள்ளையை களனி கங்கையில் வீசி, தாமும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து குறித்த பெண் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். களனி கங்கையில் வீசப்பட்ட 5 வயது பிள்ளையைத் தேடும் பணிகளில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். 

 வத்தளை – ஹெந்தல பகுதியைச் சேர்ந்த 42 வயதான தாயொருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட குறித்த பெண் இன்று(16) வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


களனி ஆற்றில் பிள்ளையை வீசிய தாய் தற்கொலை முயற்சி; பொலிஸாரால் கைது Reviewed by Author on June 16, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.