அண்மைய செய்திகள்

recent
-

முட்டை விற்பனையாளருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம்

அதிக விலைக்கு ஐந்து முட்டைகளை விற்ற குற்றச் சாட்டில் நபர் ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வீரகெட்டிய பிரதேசத்தை சேர்ந்த வியாபாரி ஒருவரே இவ்வாறு அதிக விலைக்கு விற்றுள்ளமையாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

  விசாரணை 

ஒரு முட்டை 60 ரூபா வீதம் 5 முட்டைகளை 300 ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ் வர்த்தகர் ஹம்பாந்தோட்டை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் வலஸ்முல்ல நீதிவான் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார் . இதன்போதே அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டது. ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் எச்.பி.சுமணசேகரவின் பணிப்புரையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


முட்டை விற்பனையாளருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் Reviewed by Author on November 05, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.