அண்மைய செய்திகள்

recent
-

ஆப்கானிஸ்தானில் கடும் குளிரால் இதுவரை 124 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் கடந்த 2 வாரங்களாக நிலவி வரும் கடுமையான குளிருக்கு இதுவரை 124 போ் பலியாகியுள்ளதாக அந்நாட்டு இடர் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் அடங்குவதாக கூறப்பட்டுள்ளது. 

 தன்னாா்வ தொண்டு அமைப்புகளில் பெண்கள் பணியாற்றுவதற்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பேரிடா் காலங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளக் கூடிய பல தொண்டு அமைப்புகள் தங்களது நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளன. இதுவும் கடும் குளிருக்கு பலியாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இருந்தாலும், தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணியாற்ற விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனா்

ஆப்கானிஸ்தானில் கடும் குளிரால் இதுவரை 124 பேர் பலி Reviewed by Author on January 26, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.