"வெளியேறு,வெளியேறு இராணுவமே வெளியேறு"(பட இணைப்பு) _

'எமது இடங்களையும் பொது நிலங்களையும் மீட்டெடுப்பதற்கான கவனயீர்ப்பு போராட்டம்'என்ற தலைப்பில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எங்கள் நிலம் எமக்கு வேண்டும், எங்களுடைய வீட்டுக்குச் செல்ல விடு, வெளியெறு வெளியேறு இராணுவமே வெளியேறு, முறிகண்டி மக்களுக்கு என்ன நடந்தது?, முறிகண்டி மக்கள் எங்கே?, யுத்தம் முடிந்து மூன்றாண்டுகள் இன்னும் எம் முற்றத்தில் இராணுவம், ஆடாதே ஆடாதே, இராணுவ ஆக்கிரமிப்பு நிலைக்காது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளைத் தாங்கியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நின்றனர்.
இதன்போது ஏராளமான பொலிஸார் முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தின் முன்றிலில் குவிக்கப்பட்டிருந்தனர்.
"வெளியேறு,வெளியேறு இராணுவமே வெளியேறு"(பட இணைப்பு) _
Reviewed by NEWMANNAR
on
June 26, 2012
Rating:

No comments:
Post a Comment