அண்மைய செய்திகள்

recent
-

அமைச்சர் ரிஷாட் பதியூதீன் பிணையில் விடுதலை

மன்னார் நீதவானுக்கு தொலைபேசியூடாக அழுத்தம் கொடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜரான அமைச்சர் ரிஷாட் பதியூதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சரை தலா ஐந்து இலட்ச ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் 10 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமக்கு பிணை வழங்குமாறு நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்த அமைச்சர், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீதிமன்றில் ஆஜராக தயார் என உறுதியளித்துள்ளார்.

ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறு இந்த வழக்கு விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ள நீதவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் ரிஷாட் பதியூதீன் பிணையில் விடுதலை Reviewed by NEWMANNAR on August 27, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.