மன்னாரில் மிதி வெடி அபாயக்கல்விப் பாதுகாப்பிற்கான நூல் விநியோக விழா
யுனிசெப் அமைப்பின் நிதி அனுசரணையுடன் கல்வி அமைச்சும் தேசிய கல்வி நிறுவகமும் இணைந்து மிதி வெடி அபாயக் கல்விப் பாதுகாப்பிற்காக உருவாக்கிய பாடசாலை மாணவர்களுக்கான பாடநூல் விநியோகித்தல் நிகழ்வு மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தின் முகாமைத்துவ மண்டபத்தில் நேற்று இடம் பெற்றது.
இதில் கல்வி அமைச்சின் உயர்அதிகாரிகளும் யுனிசெப் நிறுவன அதிகாரிகளும் இந்திகழ்வில் கலந்து பாடசாலைகளுக்கான இப்பாடநூல்களை உத்தியோக பூர்வமாக வழங்கிவைத்தனர்.
இப்பாடநூல் ஆனது தரம் 6 தொடக்கம் தரம் 9 வரையான வகுப்புக்களுக்கு வாழ்க்கைத் தேர்ச்சியும் குடியுரிமைக்கல்வியும் பாடத்தில் பாதுகாப்புத் தேர்ச்சி இல் இப்பாடப்பரப்பு உள்ளடக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் மிதி வெடி அபாயக்கல்விப் பாதுகாப்பிற்கான நூல் விநியோக விழா
Reviewed by NEWMANNAR
on
October 18, 2012
Rating:

No comments:
Post a Comment