மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு நிலவரம்-த.தே.கூட்டமைப்பு ஐ.நா.கூட்டத்தொடரில் முன் வைக்க வேண்டும்.
இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நாட்டின் முதுகெலும்பாக வர்ணிக்கப்படும் ஊடகவியலாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அரசின் கடமையாகும்.ஆனால் இலங்கையில் உள்ள ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியான நிலையில் உள்ளது. -கடந்த யுத்த காலத்தில் இல்லாத பிரச்சினைகள் இன்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தை பொறுத்தவரையில் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்களின் பங்களிப்பு முக்கியமானதாக காணப்பட்டுகின்றது. ஆனால் தற்போது அவர்கள் பல்வேறு நெருக்கு வாதங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். தொலைபேசி ஊடாகவும்,கடிதங்களினூடாகவும் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலாகவே காணப்படுகின்றது. மாவட்டத்தில் உள்ள குறை,நிறைகளை வெளிக்கொண்டு வந்து மக்களுக்காக போராடி வரும் ஊடகவியலாளர்களை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது ஆராம்பமாகியுள்ள ஜெனிவா ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 22 ஆவது கூட்டத்தொடரில் கலந்து கொள்ளும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு பிரச்சினையையும் முன் வைக்க வேண்டும் என மன்னார் நகர சபையின் உறுப்பினர் இரட்னசிங்கம் குமரேஸ் தனது அறிக்கையில் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு நிலவரம்-த.தே.கூட்டமைப்பு ஐ.நா.கூட்டத்தொடரில் முன் வைக்க வேண்டும்.
Reviewed by Admin
on
February 26, 2013
Rating:

No comments:
Post a Comment