முசலிப் பிரதேச நெற்செய்கை எதிர் கொள்ளும் சவால்கள்
முசலிப் பிரதேசத்தில் நெற்காணிகளின் பரப்புக்குறைந்து செல்லும் அபாய நிலைதோன்றியுள்ளது.இங்கு வியாயடித்தேக்கம்,அகத்தி கட்டுக்கரைக்குளம்,போன்ற பெரிய நீர்த்தேக்கங்களும் பல சிறிய நீர்த்தேக்கங்களும் அமைந்துள்ளன.பெரும் போகத்தில் அனைத்துப்பிரதேசங்களிலும் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றன.
ஆனால் சிறுபோகத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டும் நீர் வழங்கப்பட்டு பயிர் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. ஏனைய விவசாயிகள் ஏமாற்றமடைகிறார்கள்.இங்கு வருடாவருடம் எவ்விதப்பயனும் இன்றி ஆயிரக்கணக்கான கனலீற்றர் நீர் வீணாகக்கடலில் கலக்கின்றது. முசலிப்பிரதேசத்தில் உள்ள அருவியாறு,கல்லாறு போன்ற ஆறுகளைச் சரியான செயற்றிட்டங்கள் மூலம் திசைதிருப்பினால் இப்பிரதேச விவசாயிகளுக்கு இருபோகங்களுக்கும் பயிர் செய்யக்கூடியதாக இருக்கும்.
இதனால் நாட்டின் நெல்லுற்பத்தி அதிகரிப்பதுடன் இப்பிரதேச மக்களின் பொருளாதாரமும் வலுவடையும். முருங்கன் கட்டுக்கரைக் குளத்தின் கீழுள்ள வயல்களுக்கு தாராளமாக இருபோகங்களுக்கும் நீர் வழங்கப்படுகிறது.ஆனால் அகத்தித் தேக்கத்தின் கீழ் உள்ள வயல்களுக்கு சிறுபோகத்தில் குறிப்பிட்ட ஏக்கர்களுக்கு மாத்திரம் நீர் வழங்கப்படுவது என்ன நியாயம்.
இதில் நீர் முகாமைத்துவப்பிரச்சினையும் உள்ளது.உலகில் சிறந்த நீர்முகாமைக்கு இஸ்ரேலைக் குறிப்பிடுவார்கள் அங்கு வருடாந்த மழைவீழ்ச்சி 08 அங்குலமாகும் .அந்நீரை பாரிய குளங்களில் சேமித்து வருடம் முழுதும் பயிர்ச்செய்கைக்குப் பயன்படுத்துகிறார்கள். மேலும் இப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள சனத்தொகைப் பெருக்கத்தாலும் வயல் நிலங்கள் துண்டாடப்படுகின்றன.
அதுமட்டுமன்றி குடியிருப்பு நிலங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் வயல் நிலங்களைத் தூர்த்து வீடுகளைக் கட்டவேண்டிய நிலைக்கும் இப்பிரதேச மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.இந்நிலையை இப்பிரதேசங்களில் நேரடியாக அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இந்த நிலை தொடர்ந்தால் இப்பிரதேசத்தில் நெல்வயல்களின் பரப்புக்குறைந்து செல்லும் அபாயமுள்ளது. ஆகவே ,இப்பிரதேச மக்களுக்குப் பொருத்தமான இடங்களில் குடியிருப்புக்காணிகளையும் ,விவசாயக் காணிகளையும் பெற்றுக்கொடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு அரசியல்வாதிகளையும்,அரசஅதிகாரிகளையும் சார்ந்தது.
கே.சி.எம்.அஸ்ஹர்
ஆனால் சிறுபோகத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டும் நீர் வழங்கப்பட்டு பயிர் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. ஏனைய விவசாயிகள் ஏமாற்றமடைகிறார்கள்.இங்கு வருடாவருடம் எவ்விதப்பயனும் இன்றி ஆயிரக்கணக்கான கனலீற்றர் நீர் வீணாகக்கடலில் கலக்கின்றது. முசலிப்பிரதேசத்தில் உள்ள அருவியாறு,கல்லாறு போன்ற ஆறுகளைச் சரியான செயற்றிட்டங்கள் மூலம் திசைதிருப்பினால் இப்பிரதேச விவசாயிகளுக்கு இருபோகங்களுக்கும் பயிர் செய்யக்கூடியதாக இருக்கும்.
இதனால் நாட்டின் நெல்லுற்பத்தி அதிகரிப்பதுடன் இப்பிரதேச மக்களின் பொருளாதாரமும் வலுவடையும். முருங்கன் கட்டுக்கரைக் குளத்தின் கீழுள்ள வயல்களுக்கு தாராளமாக இருபோகங்களுக்கும் நீர் வழங்கப்படுகிறது.ஆனால் அகத்தித் தேக்கத்தின் கீழ் உள்ள வயல்களுக்கு சிறுபோகத்தில் குறிப்பிட்ட ஏக்கர்களுக்கு மாத்திரம் நீர் வழங்கப்படுவது என்ன நியாயம்.
இதில் நீர் முகாமைத்துவப்பிரச்சினையும் உள்ளது.உலகில் சிறந்த நீர்முகாமைக்கு இஸ்ரேலைக் குறிப்பிடுவார்கள் அங்கு வருடாந்த மழைவீழ்ச்சி 08 அங்குலமாகும் .அந்நீரை பாரிய குளங்களில் சேமித்து வருடம் முழுதும் பயிர்ச்செய்கைக்குப் பயன்படுத்துகிறார்கள். மேலும் இப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள சனத்தொகைப் பெருக்கத்தாலும் வயல் நிலங்கள் துண்டாடப்படுகின்றன.
அதுமட்டுமன்றி குடியிருப்பு நிலங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் வயல் நிலங்களைத் தூர்த்து வீடுகளைக் கட்டவேண்டிய நிலைக்கும் இப்பிரதேச மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.இந்நிலையை இப்பிரதேசங்களில் நேரடியாக அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இந்த நிலை தொடர்ந்தால் இப்பிரதேசத்தில் நெல்வயல்களின் பரப்புக்குறைந்து செல்லும் அபாயமுள்ளது. ஆகவே ,இப்பிரதேச மக்களுக்குப் பொருத்தமான இடங்களில் குடியிருப்புக்காணிகளையும் ,விவசாயக் காணிகளையும் பெற்றுக்கொடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு அரசியல்வாதிகளையும்,அரசஅதிகாரிகளையும் சார்ந்தது.
கே.சி.எம்.அஸ்ஹர்
முசலிப் பிரதேச நெற்செய்கை எதிர் கொள்ளும் சவால்கள்
Reviewed by Admin
on
May 31, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment