நூற்றிற்கு மேற்பட்ட இந்திய மீனவர் இலங்கை சிறைகளில் தடுத்து வைப்பு
அமைச்சர் குர்ஷித் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, எமது மீனவர்களின் சேமநலன் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அரசாங்கம் அதி முக்கியத்துவம் வழங்கி வருகின்றது. இந்திய மீனவர்களின் கைது பற்றிய செய்திகள் கிடைக்கப் பெற்றதும் அரசாங்கம் இராஜதந்திர நகர்வுகள் மூலம் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் உடனடியாக தொடர்பு கொண்டு அவர்களைத் துரிதகதியில் விடுதலை செய்து தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
பல்வேறு மட்டங்களில் நடத்தப்பட்ட இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளின் போதும் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் கடந்த வருடம் ஜனவரியில் நடைபெற்ற கடற்றொழில் குறித்த இந்திய - இலங்கை கூட்டுச் செயலணியின் நான்காவது கூட்டத்தில் இரு நாடுகளையும் சேர்ந்த மீனவர்களின் சேமநலன் மற்றும் பாதுகாப்பு குறித்து இரு நாட்டு அரசாங்கங்களும் செய்து கொள்ளப்பட்ட பரஸ்பர ஒப்புதலுக்கு ஆகக்கூடியளவிலான முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென இரு தரப்பினரும் மீண்டும் வலியுறுத்தியிருந்ததாகவும் அவர் மேலும் பிரஸ்தாபித்தார்.
நூற்றிற்கு மேற்பட்ட இந்திய மீனவர் இலங்கை சிறைகளில் தடுத்து வைப்பு
Reviewed by Admin
on
August 10, 2013
Rating:

No comments:
Post a Comment