அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாணவர்கள் இருவர் தாய்லாந்து பயணம்

இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சங்கத்தினால் 41ஆவது ஆசிய உதைபந்தாட்ட போட்டிக்காக இலங்கை 19 வயது தேசிய உதைபந்தாட்ட அணியானது நவம்பர் மாதம் 6ஆம்  திகதி தாய்லாந்து சென்று 16 ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளது. 

இவ் இலங்கை தேசிய அணியில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியை சேர்ந்த யோ.யோன்சன் மற்றும் எஸ். கிசோர் ஆகிய மாணவர்கள் இலங்கை அணிக்காக ஆடுவதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். 

இவர்கள் மன்னாரில் தலை சிறந்த வீரர்களாக திகழ்வதுடன் மன்னாருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

 யோன்சன் அவர்கள் தோட்டவெளி கிராமத்தை சேர்ந்த திரு திருமதி  யோகராஜா யோசப் அவர்களின் புதல்வராவார். கிசோர் என்பவர் பனங்கட்டுக்கொட்டு கிராமத்தை சேர்ந்த திரு திருமதி சுதாகர் அவர்களின் புதல்வராவார். 

இவர்கள் பயிற்றுவிப்பாளர் என்.ஞானராஜ் அவர்களால் உருவாக்கப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.



மன்னார் மாணவர்கள் இருவர் தாய்லாந்து பயணம் Reviewed by Admin on October 29, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.