மாநாட்டில் பங்கேற்க மன்மோகன் விருப்பம்: அறிக்கை
அயல்நாட்டுடன் தொடர்பிலிருப்பது இந்தியாவின் கேந்திர நலனுக்கு முக்கியமானது என்பதைக் கருத்தில் கொண்டே இவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அப்பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்திய பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் அடங்கிய கட்சியின் மத்திய குழுவுடன் பேசிய பின் இலங்கைக்கு வரும் தீர்மானம் கூடுதல் வலுப்பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கு அப்பால் இலங்கை அரசாங்கத்துடன் முக்கிய செல்வாக்கை பேணுவதற்கு பிரதமர் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.
ராஜபக்ஷ அரசாங்கத்துடன் தொடர்புகளை வைத்திருப்பதன் மூலமே இலங்கை அரசாங்கத்தின் நடத்தை மீது செல்வாக்கு செலுத்தவும் இதன் மூலம் தமிழர்களுக்கு நன்மை செய்யவும் முடியுமென இந்திய அரசாங்கம் சிந்திக்கின்றது.
மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கை வராதிருப்பது இலங்கையை அவமதிப்பதாக கருதப்பட்டு இந்தியாவின் நல்லெண்ணத்தை கடுமையாக பாதிக்கலாமென இந்திய அரசாங்கம் கருதுகிறது.
இலங்கை அரசாங்கம் சீனா எனும் துரும்பு சீட்டை காட்டியுள்ளது. மாலைதீவுடன் நெருக்கடி தொடர்வதனால் கொழும்புடனான தொடர்பு மோசமடைவதை இந்திய விரும்பமாட்டாது என்றும் ளலாமென ரைம்ஸ் ஒப் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.
மாநாட்டில் பங்கேற்க மன்மோகன் விருப்பம்: அறிக்கை
Reviewed by Author
on
November 01, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment