அண்மைய செய்திகள்

recent
-

மாற்றுத் திறனாளிகளின் தொழில் முயற்சிக்கு காணி வழங்குமாறு கோரிக்கை

முல்லைத்தீவு, சிலாவத்தை கிராமத்திலுள்ள மாற்றுத் திறனாளிகளின் தொழில் முயற்சிக்காக உருவாக்கப்பட்ட அரிசி ஆலைக்கு நிரந்தர காணியொன்றினை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 இந்த கோரிக்கை முல்லைத்தீவு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.சகிலாவினால் விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி அரிசி ஆலை அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் நிதியில் மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது. 

 எனினும் அரிசி ஆலை அமைக்கப்பட்ட காணியும் கட்டிடமும் தனியார் ஒருவருக்குச் சொந்தமானது என்பதுடன், தற்போது அந்தக் கட்டிடத்தினை உரிமையாளர் தனது சொந்த தேவைகளுக்காக எடுத்துள்ளார்.

 இதனால் மேற்படி ஆலை தொடர்ந்து செயற்படமுடியாமல் ஆலையின் உபகரணங்களும், பொருட்களும் கிடப்பில் கிடக்கின்றன. இதனால் அந்தக் கிராமத்திலுள்ள 130 மாற்றுத்திறனாளிகள் தொழில் வாய்ப்புக்கள் இன்றிக் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மாற்றுத் திறனாளிகளின் தொழில் முயற்சிக்கு காணி வழங்குமாறு கோரிக்கை Reviewed by Admin on December 20, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.