அண்மைய செய்திகள்

recent
-

பார­தியின் சிந்­த­னைகள் சமூக இருப்புப் பற்­றிய உணர்வை விதைப்­ப­தற்கு துணை செய்­கின்­றன. யாழ். தமிழ்ச்­ சங்­கத்தின் உப­த­லை­வர்.

பாரதியின் சிந்தனைகள் இன்றும் எம் சமூகத்தை உயிர்ப்புடன் வாழச் செய்வதற்கும் சமூக
இருப்புப் பற்றிய உணர்வை விதைப்பதற்கும் துணை செய்கின்றன என்று யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் உபதலைவரும் கல்வியியற் பேராசிரியருமாகிய மா . சின்னத்தம்பி தெரிவித்துள்ளார் .

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் முன்னெடுத்த பாரதி விழாவும் தமிழ்ச் சங்கத்திற்கான இணையத்தளத் தொடக்க நிகழ்வும் பாரதியின் பிறந்த தின நிகழ்வும் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை யாழ் . பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றன .

இந்நிகழ்வில் தலைமை வகித்து உரையாற்றும் போதே பேராசிரியர் மா . சின்னத்தம்பி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் . மேலும் அவர் உரையாற்றியதாவது ,

எமது தொன்மை , அதன் செழுமை , அதன் பேராற்றல் , அதன் வலிமை குறித்து இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் . இன்று இளையோர் பல நூற்றுக்கணக்கில் இவ்வரங்கில் கூடியிருக்கின்றனர் . இவர்களிடையே தமிழ் பற்றிய பற்றும் உணர்வும் ஏற்படுவதற்கு பாரதி விழா துணை செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார் .

வரவேற்புரையை இந்து நாகரிகத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் சுகந்தினி ஸ்ரீமுரளிதரனும் , தொடக்கவுரையை தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் தி . வேல்நம்பியும் வாழ்த்துரையைத் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணமும் வழங்கினர் .

விழாவில் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்திற்கான உத்தியோகபூர்வ இணையத்தளம் தொடக்கி வைக்கப்பட்டது . இணையத்தளத்தைத் துணைவேந்தர் தொடக்கி வைக்க அறிமுகவுரையை மருத்துவபீடப் பதிவாளர் இ . சர்வேஸ்வரா வழங்கியுள்ளார் .

யார் பாரதி ? என்ற தலைப்பில் பேராசிரியர் எஸ் . சிவலிங்கராஜாவின் சிறப்புரை , இராமநாதன் நுண்கலைக்கழகத்தின் நடனத்துறையைச் சேர்ந்த 40 இற்கும் மேற்பட்ட கலைஞர்கள் இணைந்து வழங்கிய புதுமைப் பெண்கள் என்ற பொருளில் அமைந்த நாட்டிய நாடகம் பார்த்தோரை வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் மிகச் சிறப்பாக மேடையேறியுள்ளது .

யாழ் . வளரும் முன்னணிக் கலைஞர்கள் பல்வகையான பக்கவாத்தியங்களுடன் இணைந்து வழங்கிய நல்லதோர் வீணை என்ற பொருளில் அமைந்த பாரதி பாடல்களால் ஓர் இசை அர்ச்சனை நிகழ்வும் உணர்வு பூர்வமானதாக இடம்பெற்றுள்ளது .

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி இணைப்பாளர் பா . பாலகணேசன் நன்றியுரை நிகழ்த்தியதுடன் , தமிழ்ச் சங்கப் பொருளாளர் ச . லலீசன் நிகழ்வுகளை முன்னிலைப்படுத்தியுள்ளார் .

நிகழ்வில் நல்லதோர் வீணை என்ற பெயரில் இடம்பெற்ற இசையரங்கில் பாரதியின் பாடல்களை விஸ்வப்பிரசன்ன சர்மா , ஆதித்தியா அருணகிரிநாதன் , தயாபரன் , மதுசிகன் , விஸ்வசுந்தர் , அமிர்தசிந்துஜன் , பிரசாந்தி நந்தகுமார் , சிவநயனி , சிவசங்கரி ஆகியோர் பாடினர் .

கீபோட் - சிவநாதன் ரஜீவன் , வயலின் - ப சியாமகிருஸ்ணா , மிருதங்கம் - . நந்தகுமார் , தபேலா - ஜெனில் சங்கர் , தமறின் - சசீவன் ஆகியோர் இசைத்தனர் . இந்நிகழ்வுகளை மருத்துவபீடப் பதிவாளர் இ . சர்வேஸ்வரா தொகுத்து வழங்கினார் .

தொடர்ந்து புதுமைப் பெண்கள் என்ற தலைப்பில் நாட்டிய நாடகம் இடம்பெற்றது . இதில் யாழ் . பல்கலைக்கழக நடனத்துறையைச் சேர்ந்த முதலாம் இரண்டாம் மூன்றாம் நான்காம் வருட மாணவர்கள் 40 பேர் வரையில் கலந்து கொண்டனர் .

நடன நிகழ்வுக்கான நட்டுவாங்கத்தை நடனத்துறை தலைவர் அருட்செல்வி கிருபராஜ் மேற்கொண்டிருந்தார் . குரலிசையை இசைத்துறைத் தலைவர் கலாநிதி ஸ்ரீ . தர்ஸனனும் விரிவுரையாளர் ஹம்சத்வனியும் வழங்கினர் .

இந்நிகழ்வில் மிருதங்கம் விரிவுரையாளர் கஜன் , தபேலா - விரிவுரையாளர் விமல்சங்கர் , வயலின் - வித்துவான் அ ஜெயராமன் , கீபோர்ட் - . பிரசாத் ஆகியோர் இணைந்து இசை வழங்கினர் . நிகழ்வு களில் நல்லை ஆதீனக் குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் , யாழ் . தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு விழாக்குழுச் செயலர் அருட்பணி எஸ் . ஜெயசேகரம் அடிகள் , யாழ் . மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் பீடாதிபதிகள் , பேராசிரியர்கள் , தமிழ் ஆர்வலர்கள் என பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர் .
பார­தியின் சிந்­த­னைகள் சமூக இருப்புப் பற்­றிய உணர்வை விதைப்­ப­தற்கு துணை செய்­கின்­றன. யாழ். தமிழ்ச்­ சங்­கத்தின் உப­த­லை­வர். Reviewed by Admin on December 16, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.