மன்னாரில் கட்டாக்காலி நாய்கள் தொல்லையால் அல்லல்படும் மக்கள்
குடிசன கணக்கெடுப்பின் படி இலங்கையில் வாழும் நாய்களின் தொகை சுமார் 20 இலட்சமாகும்மன்னாரில் சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமான நாய்கள் வரையில் வாழ்ந்து வருகின்றன . இவைகளில் வளர்ப்பு நாய்கள்
போக பல்லாயிரம் நாய்கள் கட்டாக்காலி நாய்களாக நடமாடித் திரிகின்றன
இவைகளில் பலவும் வளர்ப்பு நாய்களுக்குத் துணையாக வீடுகளின் அருகிலும் , பொது இடங்கள் , கடைத்தொகுதிகள் , பாழடைந்த குட்டிச் சுவர்கள் , சந்து பொந்துகளிலும் கட்டாக் காலிகளாக அலைந்து திரிகின்றன
இவைகளை இப்படியே விட்டால் இந்தக் கோடை வெப்பக்கால்த்தில் விசர் நாய்க் கடிக்கு மக்கள் ஆளாகும் நிலை யேற்ப்படும் . எனவே சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் நாய்களுக்கு விசர்நோய் தடுப்பூசி ஏற்றுவதுடன் , நாய்களின் பெருக்கத்தையும் தடை செய்யும் படியும் பொதுமக்கள் வேண்டுகின்றனர் .
மன்னாரில் கட்டாக்காலி நாய்கள் தொல்லையால் அல்லல்படும் மக்கள்
Reviewed by NEWMANNAR
on
February 28, 2014
Rating:

No comments:
Post a Comment